07. சிலிர்க்க வைக்கும் சிற்பங்களை கொண்ட “சித்ர கோபுரம்”

Thirukkurungudi Stalapuranam – Part 7

யானையின் விளையாட்டை இரசித்துவிட்டு உள்ளே நுழையும் பொழுது சித்திர கோபுரத்தின் அழகை இரசிக்க இயலும். கோபுரம் 40மீ  உயரம் கொண்டது. இந்த கோபுரத்தின் இரண்டு பக்கமும் உள்ள கதவுகள் 7.5மீ உயரம் கொண்டது.

Thirukkurungudi gopuram sculptures

பொதுவாக சிற்பக் கருப்பொருள்களில் ஒரு சித்தரிப்பு அடங்கும், இவைகள் கோபுரத்தில் வைணவமும் சைவமும் விரிவாகக் காணப்படுகின்றன. சனி வீற்றிருக்கும் மலை, காகம், வித்யாசமான  விலங்குகள்,  கலவையான அம்சங்களைக் கொண்ட சிலைகள், போன்றவை  மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கும். இங்கு கைவினைஞர்கள் ‘குஞ்சர் கலை வடிவத்தை’ பயன்படுத்தியுள்ளனர். பெண்களின் உருவங்கள் கலை ரீதியாக பின்னிப்பிணைந்து ஆக்கப்பூர்வமான முறையில் அமர்ந்திருக்கும். யானை மற்றும் குதிரை மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் வடிவங்கள். ‘குஞ்சர்’கலை வடிவத்தின் முக்கிய அமைப்பு, யானையின் வடிவம் அதன் ஒட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.